தொழிலதிபர் சேகர் ரெட்டி வங்கி பண பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து, அவரது நண்பர்கள் பிரேம்குமார், சீனிவாசுலு ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது சிபிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Add Asianetnews Tamil as a Preferred Source


இவரிடம் இருந்து புதிய பலகோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதில், 2000 ரூபாய் நோட்டுகளும் அதிகளவில் இருந்தது. எவ்வித ஆவணமும் இல்லாமல், நூற்றுக்கணக்கான சவரன் நகைகளும் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், சேகர் ரெட்டி உள்பட 3 பேர் மீதான வழக்கு இன்று சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இதையொட்டி சேகர் ரெட்டி உள்பட 3 பேர் கோர்ட்டில் ஆஜர் ஆனார்கள். கோர்ட்டில் ஆஜரான 3 பேர் மீது மேலும் 2 வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது.
