கோவையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்ற சுப்பிரமணிய சாமி, டெல்லிக்கு புறப்பட்டார். அப்போது அவர், விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
Add Asianetnews Tamil as a Preferred Source

ஜல்லிக்கட்டுக்கு விரைவில் உச்சநீதிமன்றத்தில் அனுமதி கிடைக்கும். மாடுகள் சாகவில்லை. இது பாரம்பரிய விளையாட்டு என்ற விவரத்தை உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைத்து இருக்கிறேன்.

இத்தனை நாள் தமிழகத்தில் நமக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. எனவே வரவிருக்கும் செயற்குழுவில் புதிய அமைப்புகள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்க வேண்டும். மேலும் தமிழக பா.ஜ.கவில். புதிய தலைமை தேவைப்படுகிறது என்றார்.
