Asianet News TamilAsianet News Tamil

3 பள்ளி மாணவர்கள் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனம்.. தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த சிறுமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (23), பச்சையப்பன் (17) இந்துமணி (15) ஆகிய 3 பேரும் நேற்று இரவு ஒரே இருசக்கர வாகனத்தில் உலகியநல்லூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர். 

Road Accident...3 school students were killed in kallakurichi tvk
Author
First Published Dec 15, 2023, 10:49 AM IST

கள்ளக்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 10 மற்றும் 12ம் வகுப்பை சேர்ந்த பள்ளி மாணவர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த சிறுமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (23), பச்சையப்பன் (17) இந்துமணி (15) ஆகிய 3 பேரும் நேற்று இரவு ஒரே இருசக்கர வாகனத்தில் உலகியநல்லூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அப்போது அவ்வழியாக அதிவேகத்தில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். விபத்து குறித்து அவ்வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதையும் படிங்க;- School Holiday: டிசம்பர் 27ம் தேதி விடுமுறை.. வெளியானது முக்கிய அறிவிப்பு..!

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்தில் உயிரிழந்த 3 பள்ளி மாணவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பிள்ளைகளை இழந்த பெற்றோர் நெஞ்சில் அடித்துக்கொண்டு கதறி அழுத சம்பவம் காண்பவர்கள் கண்களில் இருந்து கண்ணீர் வரவழைத்தது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios