மக்களின் மறதியால்தான் கொள்ளையடித்தவர் ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றுள்ளார் - ஸ்ரீபீரியா பகிரங்க தாக்கு...
கடலூர்
தமிழக மக்களுக்கு மறதி அதிகம். இல்லையென்றால் கொள்ளையடித்தவரை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்திருப்பார்களா? என்றும் பகிரங்கமாக தாக்கியுள்ளார் நடிகை ஸ்ரீபீரியா.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியார்களிடம் பேசிய ஸ்ரீபிரியா, "பெண்களுக்கு குறிப்பாக சிறுமிகளுக்கு எதிரான பாலியன் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. இந்த ஆட்சி அதிகாரம் சரியில்லை. இதனால்தான் இதுபோன்ற வன்கொடுமைகள் நடக்கின்றன.
பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பதிலாக, பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று ஆண்களுக்கு கற்றுக்கொடுப்பதே சரி." என்று கூறினார்.