Asianet News TamilAsianet News Tamil

இன்று இரவு விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்!

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று இரவு 10.07 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

PSLV C 42 progresses U.K. satellites today
Author
Chennai, First Published Sep 16, 2018, 3:50 PM IST

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று இரவு 10.07 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை செலுத்துவதற்கான 32 மணி நேரம் 37 நிமிடங்களுக்கான கவுண்ட் டவுன் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கியது. PSLV C 42 progresses U.K. satellites today

இங்கிலாந்து நாட்டின் நிலப்பரப்பை ஆய்வு செய்யவும், புவி கண்காணிப்பு, மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பயன்பாட்டுக்காக நோவாசார் மற்றும் எஸ் 1-4 என்ற இரு செயற்கைக்கோள்கள் இரவு 10.07 மணி்கு பிஎஸ்எல்வி சி-42 ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது. வணிக நோக்கில் இந்த இரு செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்படுகிறது. PSLV C 42 progresses U.K. satellites today

நோவாசார் செயற்கைக்கோள் காப்பாடு காடுகளை அளவை கண்காணித்தல், புவி ஆய்வு, வெள்ளம் மற்றும் பேரிடர் கண்காணிப்பு, கப்பல், கடல்வவி போக்குவரத்தை கண்காணித்தல் ஆகிய பணிகளில் ஈடுபடுகிறது. அதேபோல எஸ்-1-4 செயற்கைக்கோள் நாட்டின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, நகர்புற மேலாண்மை, பேரிடர் மேலாண்மை ஆகியவற்றை கண்காணிக்க பயன்படுகிறது. PSLV C 42 progresses U.K. satellites today

இந்த இரு செயற்கைக்கோள்களும் படங்களை துல்லியமாக கண்காணிக்கும். நோவாசார் செயற்கைக்கோள் 445 கிலோஎடையும், எஸ்1-4 செயற்கைக்கோள் 444 கிலோ எடையும் கொண்டதாகும். புவியில் இருந்து 583 கி.மீ தொலைவில் உள்ள சுற்றுவட்டப்பாதையில் இரு செயற்கைக்கோள்களும் நிலைநிறுத்தப்பட உள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios