Asianet News TamilAsianet News Tamil

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் விஷம் குடித்து காதலன் உயிரிழப்பு... விஷம் அருந்தி உயிருக்கு போராடும் போலீஸ் காதலி..!

திருச்சியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட போலீஸ் காதலர்கள் விஷம் குடித்தனர். இதில் காதலன் பரிதாபமாக உயிரிழந்தார். காதலிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

police man suicide
Author
Tamil Nadu, First Published Jan 9, 2019, 3:39 PM IST

திருச்சியில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட போலீஸ் காதலர்கள் விஷம் குடித்தனர். இதில் காதலன் பரிதாபமாக உயிரிழந்தார். காதலிக்கு மருத்தவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடி வடக்கு மலையை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஜெயதேவன்(30). இவர் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் போலீசாக வேலை பார்த்து வந்தார்.  2016ல் ராமேஸ்வரத்திற்கு பாதுகாப்பு பணிக்கு சென்றார். அங்கு சேலம் மாவட்டத்தை சேர்ந்த செண்பகம் (27) என்ற பெண் காவலரும் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ளார். காவலருடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர் காதலாக மாறியுள்ளது. police man suicide

இந்நிலையில் இருவரும் திருச்சி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அங்குள்ள காவலர் குடியிருப்பில் செண்பகம் வசித்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றபோதும், திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். அதன்படி பிப்ரவரி 17ம் தேதி  திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்து நிச்சயதார்த்த விழாவும் நடைபெற்றது. police man suicide

இதனிடையே, கடந்த சில ஆண்டுகளாக வயிற்று புண் மற்றும் குடல்வால் நோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான அறுவை சிகிச்சை செய்து கொண்ட போதும், வயிற்று வலி தீராமல் அவதிப்பட்டு வந்ததால், கடந்த 28ம் தேதி எலிமருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. உடனே இவரை மீட்ட குடும்பத்தார் துவாக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

ஆனால் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆகையால் மனமுடைந்த காதலி செண்பகம், கடந்த 4-ம் தேதி அவர்கள் காதல் மலர்ந்த ராமேஸ்வரத்திற்கு சென்று, எலி மருந்தை சாப்பிட்டு கோயிலில் மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து உடனே ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்து பின்னர் திருச்சி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவரகு்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 police man suicide

இந்நிலையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெயதேவன் நேற்று அதிகாலை மருத்தவமனையில் உயிரிழந்தார். இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பையும், சோகத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios