பெட்ரோல், டீசல் விலை…! ஒரேயடியாக அதிர்ந்த வாகன ஓட்டிகள்
தமிழகத்தில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருப்பது வாகன ஓட்டிகளை அதிர வைத்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருப்பது வாகன ஓட்டிகளை அதிர வைத்துள்ளது.
நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயம் செய்வது பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள். அதனால் புதிய விலைகள் நாள்தோறும் அறிவிக்கப்படுகின்றன. சில நேரங்களில் விலை குறைவு, பெரும்பான்மையான நேரங்களில் விலை அதிகரிப்பு என்ற நிலைதான் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இருக்கிறது.
இன்றும் பெட்ரோல், டீசல் விலை எகிறி அடித்திருக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 காசுகள் என்று அதிகரித்து ரூ. 101.79 காசுகளாக உயர்ந்திருக்கிறது. ஒரு லிட்டர் டீசலும் 33 காசுகள் உயர்ந்து ரூ.97.59 காசுகளாக உள்ளது.
இந்த புதிய விலை நிலவரம் காலை 6 முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த சில வாரங்களாக 5 காசுகள், 10 காசுகள் என்று ஏறிய பெட்ரோல், டீசல் விலை இப்போது 20 காசுகள், 30 காசுகள் என விலை எகிறியபடி உள்ளது. தொடர்ந்து ஜெட் வேகத்தில் ஏறும் பெட்ரோல், டீசல் விலை வாகன ஓட்டிகளை மிரள வைத்துள்ளது.