people road protest in ariyalur about bus lorry accident
அரியலூர் அருகே பள்ளி பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 5 மாணவர்கள் காயம் அடைந்தனர். இதனால் போக்குவரத்து பாதிப்புக்கு கண்டனம் தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் - ஜெயங்கொண்டம் பகுதியில் ஏராளமான தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றனர். அங்கு படிக்கும் பள்ளி மாணவ மாணவிகள் தனியார் பள்ளி பேருந்து மூலம் தினமும் காலை பள்ளிக்கு செல்வர்.
மேலும் அப்பகுதியில் தொழிற்சாலைகள் இருப்பதால் லாரிகள் போக்குவரத்து அதிகமாக இருக்கும். அரியலூர் - ஜெயங்கொண்டம் சாலை மிகவும் குறுகிய நிலையில் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன.
இந்நிலையில், இன்று காலை அரியலூர் அருகே பெருமாள்சாவடியில் தனியார் பள்ளி பேருந்தும் லாரியும் மோதிக்கொண்டது. இதில் 5 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதனால் விபத்தை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாறியலால் அரியலூர்-ஜெயன்கொண்டம் சாலையில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.
