Asianet News TamilAsianet News Tamil

தாலி கட்டிய கையோடு ஜெ. சமாதிக்கு வந்த ஜோடி - நெகிழ்ச்சியில் அதிமுக தொண்டர்கள்

people mourning-in-jaya-grave
Author
First Published Dec 9, 2016, 4:14 PM IST


தாலி கட்டிய கையோடு மாலையும் கழுத்துமாக ஜெ சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர் ஒரு புதுமண தம்பதி.

people mourning-in-jaya-grave

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதிக்கு அருகே அடக்கம் செய்யபட்டது.

மூன்றாவது நாளான இன்றும் ஏராளமான பொதுமக்களும் தொண்டர்களும் கூட்டம் கூட்டமாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

people mourning-in-jaya-grave

இந்த நிலையில் இன்று காலை சென்னை அயனாவரத்தை சேர்ந்த அதிமுக தொண்டர் கார்த்திக் தனது புது மனைவியை தாலி கட்டிய கையோடு ஜெ சமாதிக்கு அழைத்து வந்து அஞ்சலி செலுத்தினார்.

கட்சியின் மூத்த அமைச்சர்களே ஒரு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் கூட அடிக்காத நிலையில் கார்த்திக்கின் இந்த செயல் அதிமுக தொண்டர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios