Only about 3 lakh children were given polio drops in Villupuram - Collector

<!--[if gte mso 9]> <o:AllowPNG/> <![endif]-->

<!--[if gte mso 9]>Normal0 <w:TrackMoves/> <w:TrackFormatting/> <w:PunctuationKerning/> <w:ValidateAgainstSchemas/> falsefalsefalse <w:DoNotPromoteQF/> EN-INX-NONEX-NONE <w:BreakWrappedTables/> <w:SnapToGridInCell/> <w:WrapTextWithPunct/> <w:UseAsianBreakRules/> <w:DontGrowAutofit/> <w:SplitPgBreakAndParaMark/> <w:EnableOpenTypeKerning/> <w:DontFlipMirrorIndents/> <w:OverrideTableStyleHps/> <m:dispDef/> <![endif]--><!--[if gte mso 9]><![endif]--><!--[if gte mso 10]><![endif]--></p><p class="MsoNormal"><span >விழுப்புரம்</span></p><div type="dfp" position=2>Ad2</div><p class="MsoNormal"><span >விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 3 இலட்சத்து 30 ஆயிரத்து 423 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது என்று ஆட்சியர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.</span></p><p class="MsoNormal"><span >விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் ஐந்து வயதுக்கு உட்பட்ட 3 இலட்சத்து 30 ஆயிரத்து 423 குழந்தைகளுக்கு போலியோச் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.</span></p><p class="MsoNormal"><span >இந்த முகாம் விழுப்புரம் கண்டமானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைப்பெற்றது. இதனை, மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். </span></p><div type="dfp" position=3>Ad3</div><p class="MsoNormal"><span >அப்போது அவர் பேசியது: </span></p><p class="MsoNormal"><span >&ldquo;விழுப்புரம் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 2 ஆயிரத்து 859 மையங்கள் மற்றும் மக்கள் கூடுமிடங்களில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் 3 இலட்சத்து 30 ஆயிரத்து 423 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. </span></p><p class="MsoNormal"><span >இந்தப் பணிகளில் சுகாதாரத்துறையுடன் இணைந்து பள்ளிக் கல்வித்துறை, ஊட்டச்சத்து துறை, சமூக நலத்துறை, வருவாய்த்துறை, இந்திய குழந்தைகள் மருத்துவ சங்கம், இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பங்கேற்றன. </span></p><div type="dfp" position=4>Ad4</div><p class="MsoNormal"><span >மேலும், இந்தப் பணிகளில் 9 ஆயிரத்து 504 பணியாளர்களும், 352 மேற்பார்வையாளர்களும், மாவட்ட அளவில் 12 சிறப்பு குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டனர்&rdquo; என்று ஆட்சியர் சுப்பிரமணியன் பேசினார்.</span></p><p class="MsoNormal"><span >இந்த முகாமில் துணை இயக்குனர்கள் (சுகாதாரப்பணிகள்) சௌண்டம்மாள், ஜெமினி, சுகாதார மனித வள மேம்பாட்டு நிறுவன முதல்வர் மருத்துவர் கீதா, இந்திய மருத்துவக்கழகம் மருத்துவர் நேரு, மாவட்ட தாய்சேய் நல அலுவலர் சசிகலா மற்றும் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் பங்கேற்றனர்.</span></p>