Asianet News TamilAsianet News Tamil

திண்டிவனம் அருகே அடுத்தடுத்து 4 ஆம்னி பேருந்துகள் மோதல்... 5 பேர் படுகாயம்!

திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்கள்ளானது. இந்த விபத்தில் 5 பயணிகள் காயமடைந்தனர். 

Omni bus collision... 5 people injured
Author
Tamil Nadu, First Published Dec 18, 2018, 10:24 AM IST

திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்துக்கள்ளானது. இந்த விபத்தில் 5 பயணிகள் காயமடைந்தனர். 

விழுப்பும் மாவட்டம் திண்டிவனம் அடுத்த விளங்கம்பாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மினி லாரி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது லாரியில் டயர் திடீரென வெடித்தது. இதனையடுத்து டயர் வெடித்ததையடுத்து சாலையிலேயே டயரை மாற்றிக் கொண்டிருந்தனர். Omni bus collision... 5 people injured

அப்போது அசுரவேகத்தில் வந்துக்கொண்டிருந்த ஆம்னி பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக 4 பேருந்துகள் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 5 பயணிகள் காயமடைந்தனர். உடனே அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தினால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios