Asianet News TamilAsianet News Tamil

தனக்கு தானே பிரசவம்.. பிஞ்சு குழந்தையின் காலை வெட்டி கழிவு நீரில் போட்ட செவிலியர்-அதிரடியாக கைது செய்த போலீஸ்

திருமணத்திற்கு முன்பே செவிலியர் ஒருவர் கர்ப்பமான நிலையில், தனக்கு தானே பிரசவம் பார்த்த போது குழந்தையின் கால்களை வெட்டி கழிவு நீரில் போட்டு கொலை செய்த வழக்கில் செவிலியர் கைது செய்யப்பட்டார். 

Nurse arrested in Chennai for cutting baby legs during delivery KAK
Author
First Published May 5, 2024, 8:22 AM IST

கர்ப்பமான செவிலியர்

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் வினிஷா(24), இவர் தி. நகர் சவுத்போக் ரோட்டில் தங்கி  கடந்த ஒரு வருடங்களாக டாக்டர் நாயர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் சென்னையில் ஐடி கம்பெனியில் பணியாற்றி வரும் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த செல்வமணி (29) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இரண்டு பேரும் பல சமயங்களில் தனிமையில் இருந்துள்ளனர். இதன் காரணமாக வினிஷா கர்பமாகியுள்ளார். இதனையடுத்து கர்ப்பத்தை கலைக்க முயன்றுள்ளார். ஆனால் 5 மாதங்களை தாண்டியதால் கலைக்க முடியாமல் இருந்துள்ளார். 

Nurse arrested in Chennai for cutting baby legs during delivery KAK

தனக்கு தானே பிரசவம்

இந்தநிலையில் கடந்த வாரம் வினிஷாவிற்கு வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனக்கு தானே பிரசவம் பார்க்க முயன்றுள்ளார். அப்போது வயிற்றில் இருந்து பெண் குழந்தை வெளியே வந்தபோது அதன் காலை வெட்டி, கழிவுநீர் தொட்டியில் வீசியுள்ளார். இதனையடுத்து இறந்த குழந்தையுடன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.  இறந்த குழந்தையை பத்திரப்படுத்திய மருத்துவர்கள் வினிஷாவை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் தியாகராய நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Nurse arrested in Chennai for cutting baby legs during delivery KAK
சிறையில் அடைத்த போலீஸ்

குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் காலை வெட்டி எடுத்ததால் குழந்தை இறந்தது மருத்துவ அறிக்கையில் தெரியவந்தது. இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றப்பட்டு இருந்த நிலையில் எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செவிலியர், நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்போது அவரை கைது செய்த போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

வீட்டில் தனக்குத் தானே பிரசவம் பார்த்த செவிலியர்.. பிறந்த பச்சிளம் குழந்தையின் கால்களை வெட்டிய கொடூரம்

Follow Us:
Download App:
  • android
  • ios