Asianet News TamilAsianet News Tamil

நிர்மலா தேவி சாட்சிகளை கலைத்துவிடுவார்...! ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்...!

nirmala devi plea rejected by court
nirmala devi plea rejected by court
Author
First Published May 11, 2018, 5:29 PM IST


மாணவிகளிடம் பாலியல் பேரம் நடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள கணித பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

கல்லூரி மாணவிகளை பாலியல் பேரம் பேசி தவறான வழிகாட்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த மாதம் கைது செய்யப்பட்டார் கணித துறை பேராசிரியர்
நிர்மலா தேவி. இதனை விசாரிக்க மாநில அரசு சார்பில் சிபிசிஐடி காவல் துறையும் ஆளுநர் அமைத்த சந்தானம் தலைமையிலான குழுவும் மதுரை
பல்கலைகழக்த்திலும் நிர்மலாதேவி வேலை பார்த்த அருப்புக்கோட்டை தேவாங்கா கலை கல்லூரியையும் விசாரித்து வருகிறது.

நிர்மலா தேவியின் வீட்டையும் சோதனையிட்டு அதற்கு சீல் வைத்தது சிபிசிஐடி காவல்துறை. இந்த நிலையில் நேற்று முந்தினம் வீட்டின் பூட்டு  உடைபட்டிருப்பதை நிர்மலா தேவியின் அண்ணன் காவல்துறையில் புகார் அளித்தார். ஆவணங்கள் ஏதும் திருடப்பட்டதா? அல்லது நகை பணத்துக்கான
கொள்ளை முயற்சியா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென நிர்மலா தேவி, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட நிர்மலா தேவி தரப்பு வழக்கறிஞர், அவர் பேசிய ஆடியோவில், பாலியல் பேரத்துக்கான நேரடியான எந்த வார்த்தையும் பேசவில்லை என்றும் பொதுவாகத்தான் பேசியுள்ளார் என்றும் தனது வாதத்தை முன் வைத்தார்.

ஆனால், நிர்மலா தேவி ஜாமினில் வெளியே வந்தால், சாட்சிகளைக் கலைத்துவிடுவார் என்று போலீஸ் தரப்பில் நீதிமன்றத்தில் கூறியதாக தெரிகிறது. 

அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், கைப்பேசி மற்றும் வாட்ஸ் அப் உரையாடல்கள் யாவும் பாலியல் பேரத்தை உறுதி செய்வதாக கூறி வாதிட்டார். இதனைத் தொடர்ந்து, நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios