விசுவாசம் மாறாத நிலோஃபர் - ஜெ. சமாதியில் அஞ்சலி
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நேற்று மாலை சென்னை மெரினாவில் அமைந்துள்ள எம்ஜிஆர் சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது.
இன்று அதிகாலை முதலே மக்கள் கூட்டம் கூட்டமாக ஜெ.சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் நேற்று முழுவதும் ஜெயலலிதா உடல் அருகே இருந்தது மட்டுமல்லாமல் இன்று காலை ஜெ உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.