உருவானது "ஓகி" புயல்...! 80 km அதிவேக காற்று....கடல் சீற்றம்...! 2 நாட்களுக்கு வெளியில் வர கூட சிரமம்...
கன்னியாகுமரியிலிருந்து 70 கிமீ தொலைவில் ஓகி புயல் நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்
புதியதாக உருவாகி உள்ள இந்த ஓகி புயல், நிலபரப்பை தொடாமல், கடலிலேயே கடந்து லட்ச தீவை நோக்கி செல்லும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது
ஆனாலும், இதன் காரணமாக தமிழகம் முழுவதுமே பரவலாக மழை பெய்யும் என்றும்,செயற்கை கொள் புகைப்படத்தை பார்க்கும், புயல் லட்ச தீவை நோக்கி செல்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது
தென்மாவட்டங்கள்
தென் மாவட்டங்களில் மட்டும் கன மழை அல்லது மிக கனமழை பெய்யும் என்றும் கன்னியாகுமரி மற்றும் ராமேஸ்வரம் பகுதியில் பலத்த காற்று வீசுவதால், மரங்கள் முறிந்து விழுவதாக ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது
முறிந்த மரங்களை அகற்றும் பணியில் ....
வாகனங்கள் செல்ல இடையூறு
பலத்த காற்று வீசுகிறது
மீனவர்கள்
தென்தமிழகம் சேர்ந்த மீனர்வர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுஉள்ளது
ஓகி புயல் காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்தில், கடல் சீற்றம் அதிகமாக காணப்படும், காற்று படு வேகமாக வீசும் என்பதால் மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல கூடாது என தெரிவிக்கப் பட்டு உள்ளது
மழை அளவு
கோவலம்,தக்கலை தலா - 7 செமீ
சென்னை நுங்கம்பாக்கம் , மீனம்பாக்கம்- 6 செமீகடலூர், சாத்தன்குளம் , பாபநாசம், நாகர்கோவில்,செம்பரம்பாக்கம்,துண்டி,பரங்கி பேட்டை , செங்கோட்டை மரக்காணம் - 4 செமீ
ஓகி புயல் விளக்கம்
நேற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில், நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றலுத்த மண்டலாக வலுப்பெற்றது .இன்று காலை 8.30 மணி அளவில்.....அது புயலாக மாறி உள்ளது.இந்த புயலுக்கு பெயர்தான் ஓகி.
இந்த புயலால் தேனீ,திண்டுக்கல்,கோவை,நீலகிரி,டெல்டா மாவட்டங்களான தஞ்சை, புதுகோட்டை போன்ற இடங்களில் ஓரிரு இடங்களில் கன மழை காணப்படும்,
கன்னியாகுமரியில் க டல் சீற்றம்
சென்னையை பொறுத்தவரை இடைவெளிவிட்டு மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது