Asianet News TamilAsianet News Tamil

நாங்குநேரி சம்பவம் நெஞ்சைப் பதறச்செய்கிறது... டிடிவி தினகரன் தமிழக அரசிடம் கோரிக்கை

பள்ளி மாணவர்களிடையே சாதி வேறுபாடு காரணமாக கொலை வெறித் தாக்குதல் நடத்தும் அளவிற்கு துணிவது நெஞ்சைப் பதறச்செய்கிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Nanguneri incident is heartbreaking says TTV Dhinakaran
Author
First Published Aug 12, 2023, 9:35 AM IST

நாங்குநேரியில் தலித் மாணவர் மீது நடத்தப்பட்ட கொடூரமான சாதி வெறி தாக்குதல் குறித்து அமமுக பொதுச் செயலளார் டிடிவி தினகரன் ட்விட்டரில் கருத்துதெரிவித்துள்ளார். மாணவர்கள் கொலை வெறித் தாக்குதல் நடத்தும் அளவுக்குத் துணிவது நெஞ்சைப் பதறச்செய்கிறது என்று கூறியுள்ள அவர், பள்ளிக்கல்வித்துறையிடம் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார்.

ட்விட்டரில் டிடிவி தினகரன் கூறியிருப்பதாவது:

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய மோதலால் பள்ளி மாணவரையும், அதனை தடுக்கமுயன்ற அவரது சகோதரியையும், சக மாணவர்கள் அரிவாளால் தாக்கியுள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் இந்த விஷயத்தில் உஷாரா இருக்கணும்!

அரசு உதவி பெறும் பள்ளியில் 12 ஆம் வகுப்புப் படிக்கும் தாக்குதலுக்கு உள்ளான மாணவர் சின்னத்துரையோடு ஒப்பிட்டு நன்றாக படிக்கும்படி சக மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை கூறியது, மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியதால் இந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்ந்திருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பள்ளியில் படிக்கும் மாணவர்களிடையே சாதி காரணமாக வேறுபாடு ஏற்பட்டிருப்பதும்; அதன் காரணமாக கொலை வெறித் தாக்குதல் நடத்தும் அளவிற்கு மாணவர்கள் துணிவதும் நெஞ்சைப் பதறச்செய்கிறது.

இதன் காரணமாக தென்மாவட்டங்களில் பதற்றம் ஏற்படாமல் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுப்பதோடு ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகங்கள் உரிய கண்காணிப்புடன் மாணவர்களிடையே இத்தகைய மோதல்கள் நேரிடுவதற்கு காரணமான சூழல்களைக் கண்டறிந்து அவற்றைக் களையவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

செவ்வாய் கிரகத்தின் கேல் பள்ளத்தில் தண்ணீர் இருந்திருக்கும்... நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய ஆதாரம்!

Follow Us:
Download App:
  • android
  • ios