மக்களே உஷார்! இப்படியெல்லாம் கூட நகையை திருடுகிறார்கள்... மர்ம நபருக்கு வலைவீச்சு...
கடலூர்
கடலூரில் பெண்ணிடம் இருந்து ரூ.3½ இலட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிய மர்ம நபரை காவலாளர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர் போடிச்செட்டித்தெருவைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் கடலூர் பேருந்து நிலையத்தில் இருக்கும் நாகம்மன் கோயிலில் சாமி கும்பிட வந்தார்.
பின்னர், இதுகுறித்து கலைச்செல்வியின் மகன் சுகுமாறன் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவலாளர்கள் வழக்குப் பதிந்து நகைகளை திருடிய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.