Asianet News TamilAsianet News Tamil

வடபழனியில் பயங்கரம்..!! கள்ளக்காதலுனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி - ரோந்து போலீசின் சந்தேகத்தால் சிக்கினர்

murder in-vadapalani
Author
First Published Nov 30, 2016, 11:50 AM IST


சென்னை வடபழனி அருகே மனைவியின் கைகளை கட்டிபோட்டு கணவனை கொன்று  கொள்ளை சம்பவம்  போல் நடித்த மனைவியின் கள்ளக்காதலனையும் மனைவியையும்  போலீசார் கைது செய்தனர். 

வடபழனி பக்தவச்சலம் 2வது காலனியை சேர்ந்தவர்  கோபாலகிருஷ்ணன்(35) . இவர் அதே பகுதியில் ஆடிட் அலுவலகம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.  இவருடைய மனைவி பாரதி(30) பட்டதாரியான இவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். 

murder in-vadapalani

பாரதியுடன் ஒரே அலுவலகத்தில்  கார்திக் ரவிந்திரன் லியோ என்பவரும் பணியாற்றி வந்துள்ளார். கோபாலாகிருஷ்ணனுக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு எழுந்துள்ளது. இல்லற வாழ்க்கையிலும் உறவு சரியில்லை. 

இதனால் தான் வேலை பர்க்கும் இடத்தில் பணியாற்றும்  கார்திக் ரவிந்திரன் லியோவிடம் பாரதி குடும்ப பிரச்சனைகளை கூறியுள்ளார். நட்பு நாளடைவில் இறுகி கள்ளக்காதலாக  மாறியுள்ளது.

அடிக்கடி பேசிபழகி வெளியே சுற்றியவர்கள் ஒரு கட்டத்தில் பாரதியின் வீட்டிலேயே சந்தித்து உல்லாசமாக இருக்க துவங்கியுள்ளனர். கணவன் வீட்டில் இருக்கும் போதே கணவன் ஹாலில் படுத்திருக்க வீட்டுக்கு கள்ளக்காதலனை அழைத்து பாரதி பல முறை உல்லாசமாக  இருந்துள்ளார். 

இதை கண்டு பிடித்த கோபால கிருஷ்ணன் இது பற்றி மனைவியிடம் கேட்டு சண்டை போட்டுள்ளார். மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார். இனி கள்ளக்காதலனை சந்திக்கவே கூடாது என முட்டுக்கட்டை போட்டுள்ளார். 

murder in-vadapalani

கணவ்ன் உயிரோடு இருக்கும் வரை தனது ஆசை நிறைவேறாது என்று பாரதி நினைத்துள்ளார்.  இதனால் தன் கணவனை கொலை செய்ய திட்டமிட்ட பாரதி தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார். கொள்ளை சம்பபவம் போலவும் மனைவியை கட்டி போட்டு தடுக்க வந்த கணவனை கொலை செய்தது போல அலிபியை உருவாக்கி தப்பிக்க திட்டமிட்டுள்ளனர்.

இருவரும் சேர்ந்து கொலையை எப்படி செய்யலாம் என திட்டமிட்டுள்ளனர். அதன் படி இரவு கோபாலகிருஷ்ணன் உறங்கிய பின்னர் கள்ளக்காதலன் கார்த்திக் ரவீந்திரன் லியோவை வீட்டுக்கு அழைத்துள்ளார் பாரதி. 

தான் வீட்டுக்கு வருவதை யாரும் பார்த்துவிட கூடாது ஒருவேலை போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகள் எதையாவாது எடுத்து பார்த்தாலும் தன்னை அடையாளம் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக ஒரு விக் ஒன்றை வாங்கி  தனது தலையில் விக்கை வைத்து கொண்டு உருவத்தை மாற்றிகொண்டு பகதவச்சலம் காலனிக்கு வந்துள்ளார். 

murder in-vadapalani

இரவு இரண்டு மணிக்கு கோபாலா கிருஷ்ணன் போதையில் வீட்டு ஹாலில் உறங்கியபடி கிடக்க பாரதி கள்ளக்காதலனை வீட்டுக்குள் வரவழைத்துள்ளார். பின்னர் இருவரும் தனியறையில் உல்லாசமாக இருந்துள்ளனர். 

பின்னர் காலை 4 மணி அளவில் உறக்கத்திலிருந்த கணவன் கோபாலகிருஷ்ணனை ஆட்டை அறுப்பது போல் கத்தியை வைத்து அறுத்துள்ளார் கார்திக் ரவிந்திரன் லியோ .பின்னர் ஏற்கனவே திட்டமிட்டபடி  கொள்ளை சம்பபவம் நடந்தது போல காண்பிக்க மனைவி பாரதியை கை, கால்ககளை நாற்காலியுடன் சேர்த்து கட்டி முகத்தில் மயக்க ஸ்ப்ரேவை அடித்துள்ளார். இதில் சற்று கூடுதலாக அடித்ததால் மனைவி பாரதி மயக்கத்துக்கு சென்றார். 

பின்னர் சாவகாசமாக கோபாலகிருஷ்ணனின் செல்போன்களை எடுத்துகொண்டு ரத்தம் தோய்ந்த கத்தியையும் , சட்டையையும் ஒரு பையில் போட்டு கொண்டு விக்கை தலையில் வைத்துகொண்டு வெளியே வந்துள்ளார். 

அந்த நேரம் இவரது கெட்ட நேரம் அவ்வழியாக ரோந்து வந்த வடபழனி போலீசார் சந்தேகப்பட்டு அவரை அழைத்து விசாரித்துள்ளனர். அவர்களிடம் முன்னுக்கு பின் முரணாக கார்திக் ரவிந்திரன் லியோ பேசியுள்ளார் இங்கேதான் வீடு , நானும் போலீஸ் தான் என்று கூறியுள்ளார். 

 சந்தேகமடைந்த போலீசார் அவரது பையை சோதிக்க அதில்  ரத்தம் தோய்ந்த கத்தியும் ,ரத்தக்கறையுடன் உள்ள சட்டையும் இருந்துள்ளது. இதை பார்த்து போலீசார் விசாரிக்க கார்திக் ரவிந்திரன் லியோ  தப்பி ஓடியுள்ளார். அவரை  நீண்ட தூர துரத்தலுக்கு பின் துரத்தி பிடித்துள்ளனர். 

பின்னர் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்த போது தான் செல்போனை கொள்ளை யடிக்க கோபாலகிருஷ்ணன் எனபவர் வீட்டுக்கு சென்றபோது அவரை கொலை செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார். உடனடியாக கோபாலகிருஷ்ணன் வீட்டுக்கு சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

பின்னர் மயக்கமாக இருந்த பாரதியை மீட்டு ராயபேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கார்திக் ரவிந்திரன் லியோ வை தீவிர விசாரணை நடத்தியபோது கள்ளக்காதலால் திட்டமிட்டு கொலை செய்ததை ஒத்துகொண்டுள்ளார். 

இதனால் போலீசார் கார்திக் ரவிந்திரன் லியோவை கைது செய்தனர். பாரதி சிகிச்சைக்கு பின்னர் கைது செய்யப்படுவார் என தெரிகிறது. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனையே நாடகமாடி மனைவி கொலை செய்த சம்பபவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios