Asianet News TamilAsianet News Tamil

2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாயும் தற்கொலை.. இது தான் காரணமா? வெளியான பகீர் தகவல்..!

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரை அடுத்த ஆத்துவழி பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் முருகன்(29). லாரி ஓட்டுநராக உள்ளார். இவரது மனைவி மீனா(28). வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் இருவரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா (5), முகிஷா (2) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

Mother committed suicide by throwing 2 children into a well
Author
First Published Jan 5, 2023, 11:49 AM IST

காதல் திருமணம் செய்த தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததன் காரணமாக 2 பெண் குழந்தைகளை கொலை செய்து தாய் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரை அடுத்த ஆத்துவழி பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் முருகன்(29). லாரி ஓட்டுநராக உள்ளார். இவரது மனைவி மீனா(28). வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் இருவரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா (5), முகிஷா (2) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

காதல் திருமணம் செய்தாலும் இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், விரக்தி அடைந்து இந்த வாழ்க்கை எதுக்கு என்று முடிவு எடுத்து இரண்டு முறை தற்கொலைக்கும் முயன்றும் காப்பாற்றப்பட்டார். இந்நிலையில், மீண்டும் வழக்கும் போல கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மீனா அப்பகுதியில் உள்ள கிணற்றில் இரண்டு குழந்தைகளையும் வீசி கொலை செய்துவிட்டு தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தாய், இரண்டு குழந்தைகள் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios