இரண்டாவது நாளில் லாரி ஸ்டிரைக் - பெட்ரோல், டீசலுக்கு ஜி.எஸ்.டி? நிறைவேறுமா கோரிக்கை?
அரியலூர்
பெட்ரோல், டீசலுக்கு ஜி.எஸ்.டி விதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரிகள் இரண்டாவது நாளாக இன்றும் இயக்கப்படவில்லை. இதனால் அரியலூரில் ரூ.10 வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது.
போராட்டம் இன்றோடு இரண்டாவது நாளை எட்டியுள்ளது. இந்த நிலை இப்படியே நீடித்தால் அத்தியாவசியப் பொருட்களான பால், காய்கறி போன்றவற்றின் விலை உயரும் அபாயமும், பொருட்களை பதுக்கி வைத்து தட்டுப்பாடு ஏற்படுத்தவும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.