செப்டம்பர் 22 முதல் இன்றுவரை.... மருத்துவமனையில் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்து வந்த நாட்கள்...
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, செப்டம்பர் 22 முதல் இன்றுவரை மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வுகளை இங்கு காணலாம்.
செப்டம்பர் 22 : நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டாா்.
செப். 23 : முதலமைச்சா் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
செப். 24 : வழக்கமான உணவுகளை முதலமைச்சா் ஜெயலலிதா உட்கொள்வதாக தகவல் தொிவிக்கப்பட்டது.
செப். 25 : மேல் சிகிச்சைக்காக முதலமைச்சர் ஜெயலலிதா சிங்கப்பூர் செல்வார் என்பது போன்ற தவறான செய்திகளை யாரும் வெளியிட வேண்டாம் என மருத்துவமனை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தது.
செப். 29 : முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைகளுக்கு நல்ல முறையில் முதலமைச்சர் ஒத்துழைப்பதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டது.
அக்டோபர் 2 : லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே சென்னை வருகை. முதலமைச்சருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆலோசனை.
அக். 3 : தொற்று நோயை சரிசெய்ய, ஆன்டிபயாடிக் மருந்துகள் செலுத்தப்பட்டதுடன், சுவாசக் கருவியும் பொருத்தப்பட்டது.
அக். 4 : உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சிகிச்சை தொடர்வதாகவும் தகவல்.
அக். 6 :டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவா்கள் சென்னை வருகை. அப்பல்லோ டாக்டர்களுடன் இணைந்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து ஆலோசனை.
அக். 8 : முதலமைச்சர் ஜெயலலிதாவின் நுரையீரலில் இருக்கும் நீரை நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.
அக். 10 :சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள் வருகை. முதலமைச்சருக்கு உடற்பயிற்சி அளித்தனர். அதே நாளில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் மீண்டும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தனர்.
அக். 21 : தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவா்களின் தலைமையில் இதயநோய், நுரையீரல் நோய், தொற்று நோய் சிகிச்சை உள்ளிட்ட டாக்டர்கள் தொடர்ந்து முதலமைச்சருக்கு சிகிச்சை அளிப்பதாக அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
நவம்பர் 19 : தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டில் உள்ள தனி அறைக்கு ஜெயலலிதா மாற்றம். தொடர்ந்து அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை வழங்கப்பட்டது.
டிசம்பர் 3 :- டெல்லி எய்ம்ஸ் மருத்துவா்கள் மீண்டும் சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆராய்ந்தனர்.
டிச. 4 :ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.