சொந்த வீட்டில் ஒருவர் இறந்ததை போல ஜெ.வுக்கு காரியம் செய்த அதிமுக தொண்டர்கள்..!!!
தமிழக மக்களின் பேராதரவோடு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தவர் செல்வி ஜெயலலிதா.
பல லட்சம் அதிமுக தீவிர தொண்டர்கள் மட்டுமின்றி பெரும்பாலான தமிழக பெண்கள் மனதில் குடியிருந்தார் ஜெயலலிதா.
பெண்களின் பிரதிநிதியாக ஜெயலலிதா விளங்கியதால்தான் சட்டமன்றம்,நாடாளுமன்றம்,உள்ளாட்சி தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற முடிந்தது.
ஜெயலலிதா இறந்து 16வது நாளான இன்று தமிழகம் முழுவதும் உள்ள வாரது தீவிர விசுவாசிகள் அவருக்கு செய்ய வேட்னிய முக்கிய் கடமையான 16ஆம் நாள் காரியத்தை செய்தனர்.
குறிப்பாக சென்னை மதுரை நெல்லை போன்ற அனைத்து பகுதிகளிலும் பெண்கள் பெண்கள் பலவகை பலகாரங்கள் வாங்கி வைத்து ஜெயலலிதாவுக்கு படைத்தும் ஒப்பாரி வைத்து அழுதும் சடங்குகளை செய்தனர்.
மேலும் ஆங்காங்கே உருவப்படங்கள் திறப்பு, 16ஆம் நாள் துக்கம் அனுசரித்தல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடந்தேறின.
தனகல் குடுமபத்தில் ஒருவர் மறைந்தால் என்ன செய்வார்களோ அதே பாசத்தோடும் பரிவோடும் ஜெயலலிதாவுக்கு சடங்கு சம்பிரதாயங்கள் செய்தது காண்போரை நெகிழ வைத்தது.