Indira gandhi award for t.m.krishna

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கர்னாடக இசை பாடகர் டி.எம். கிருஷ்ணாவுக்கு 2015-2016 ஆண்டுக்கான இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது வழங்கப்படுகிறது. இதற்கான முறையான அறிவிப்பை விருது ஆலோசனைக்குழுவின் உறுப்பினர் செயலாளர் மோதிலால் வோரா, டெல்லியில் வெளியிட்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேசிய ஒருமைப்பாட்டுக்கு பாடுபடுபவர்களுக்காக மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல கர்நாடக இகைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக இசை மேல்தட்டு மக்களுக்கு மட்டுமல்ல அடித்தட்டு மக்களுக்கும் சொந்தமானது என தீவிரமாக பிரச்சாரம் செய்து வரும் டி.எம்.கிருஷ்ணா, இதற்காக சேரி பகுதிகளில் வாழும் மக்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கர்நாடக இசையை கற்றுத் தருகிறார்.

இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது, பாராட்டு சான்றிதழும், ரூ. 10 லட்சம் ரொக்கப்பரிசும் கொண்டதாகும்.

டி.எம். கிருஷ்ணா, ஏற்கனவே ரமோன் மகசேசே விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.