2025-26ஆம் ஆண்டிற்கான தமிழக நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தாக்கல் செய்தார். தொல்லியல் அகழாய்வுகள், அருங்காட்சியகங்கள், கிராம சாலை மேம்பாடு மற்றும் கலைஞர் கனவு இல்லம் திட்டம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இதில் அடங்கும்.

தமிழக சட்டப்பேரவையில் 2025-2026ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் மற்றும் திட்டங்களை பார்ப்போம்.

  • உலகத் தமிழ் ஒலிம்பியாட் ரூ.1 கோடி பரிசுத்தொகை
  • தமிழ்நாட்டில் 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள்
  • சிவகங்கை - கீழடி, சேலம் - தெலுங்கனூர், கோயம்புத்தூர் - வெள்ளலூர், கள்ளக்குறிச்சி - ஆதிச்சனூர், கடலூர் - மணிக்கொல்லை, தென்காசி -கரிவலம்வந்தநல்லூர், தூத்துக்குடி - பட்டணமருதூர்
  • இராமநாதபுரம் மாவட்டத்தில் நாவாய் அருங்காட்சியகம் ரூ.21 கோடி
  • ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம் ரூ.22 கோடி
  • எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஐம்பொன் மற்றும் செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் அமைக்க 40 கோடி ஒதுக்கீடு
  • கலைஞர் கனவு இல்லம் ஊரகப் பகுதிகளில் 1 இலட்சம் புதிய வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு

  •  முதலமைச்சரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டம் 6100 கி.மீ. நீளம் .2,200 ஒதுக்கீடு
  • சீரமைக்க இயலாத வீடுகளுக்குப் பதிலாகப் 25,000 புதிய வீடுகள் கட்ட ரூ.600 கோடி ஒதுக்கீடு
  • திருச்சி, மதுரை, ஈரோடு, கோயம்புத்தூர் & திருநெல்வேலி மாநகராட்சிகளில் நதிக்கரை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள ரூ.400 கோடி ஒதுக்கீடு
  • சென்னையில் சீராகக் குடிநீர் விநியோகித்திட முதன்மைச் சுற்றுக்குழாய்த் திட்டத்திற்கு 2,423 ரூபாய் ஒதுக்கீடு
  • 40 ஆண்டுகள் பழமையான 102 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மறுசீரமைப்பு ரூ.675 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • சென்னை பெருநகரப் பகுதிகளில் மழைநீர் உறிஞ்சும் 7 பல்லுயிர்ப் பூங்காக்கள் (Sponge Park)ரூ.88 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவு செய்யப்படும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்