ஹெல்மெட் அணிந்தால் "பேனா , சாக்லேட் பரிசு"....போக்குவரத்து போலிசாரின் அன்பு பரிசு உங்களுக்கும் வேண்டுமா ?
ஹெல்மட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை உற்சாகப்படுத்தும் விதமாக , ஒரு போலீசார் மேற்கொண்ட வித்தியாசமான முறை மக்களிடேயே வியப்பாக பேசப்பட்டு வருகிறது
உயிர் காக்கும் தோழனாய் உள்ள ஹெல்மெட் டை அணியாமால் பலரும் சாலையில் வலம் வருவதை பார்க்கிறோம் .
அவ்வாறு ஹெல்மெட் இல்லாமல் பயணம் செய்யும் போது,போலீசார் மேற்கொள்ளும் சோதனையில் பிடிப்பட்டால் அபராதம் மற்றும் சாலை விதிகளை மீறியதாக சில வழக்குகள் கூட போடப்படும் .
ஆனால் ஹெல்மட் அணிந்து வந்த வாலிபர்களை உற்சாகப்படுத்தவும் , மற்றவர்களும் ஹெல்மட்டை அணிய தூண்டும் வகையிலும் அவர்களுக்கு அன்பு பரிசாக பேனா மற்றும் சாக்லேட்டை வழங்கி , அவர்களின் உள்ளதை கொள்ளை அடித்துள்ளார் குமரி மாவட் போலீசார் .
தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது போக்குவரத்து போலீசாரின் இந்த சம்பவம் மக்களிடையே வியப்பாக பேசப்படுவது மட்டுமின்றி , அனைவரின் பாராட்டு களையும் பெற்று வருகிறார் .