தென் மேற்கு வங்கக்கடலில் இன்று உருவாகவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென் கடலோர மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் கனழை பெய்யும் என்று  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 15 ஆம் தேதி வங்ககடலில்உருவானகஜாபுயல்தமிழகத்தின்கடலோரமாவட்டங்களானதஞ்சை, திருவாரூர், நாகைமற்றும்புதுக்கோட்டையில்பெரும்சேதத்தைஏற்படுத்திசென்றது.

இந்தபுயலால்புதுச்சேரியிலும்பாதிப்புஏற்பட்டது. காரைக்கால்உள்ளிட்டபகுதிகளில்பெரும்பாதிப்பினைகஜாபுயல்ஏற்படுத்திசென்றது. இதனால்மக்களின்இயல்புவாழ்க்கைஅடியோடுமுடங்கிபோனது.

இந்தநிலையில், வங்கக்கடலில்புதியகாற்றழுத்ததாழ்வுபகுதிநாளைஉருவாகஉள்ளதுஎன்றுஇந்தியவானிலைஆய்வுமையம்தெரிவித்துள்ளது

இதனைஅடுத்துடிசம்பர் 7, 8 ஆகியதேதிகளில்அதாவது நாளையும்இ நாளை மறுநாளும் தென்கடலோரமாவட்டங்களில்கனமழைக்குவாய்ப்புஉள்ளது என்றும் குமரிக்கடல், மன்னார்வளைகுடா, தென்மேற்குவங்ககடலுக்குஅடுத்த 3 நாட்களுக்குமீனவர்கள்மீன்பிடிக்கசெல்லவேண்டாம்என்றுஎச்சரிக்கைவிடப்பட்டுஉள்ளது.

இதே போல் காற்றழுத்த தாழ்வு சுழற்சி நகர்ந்துள்ளதால் தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

இந்திய பெருங்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த சுழற்சி தற்போது, இலங்கையின் கொழும்பு அருகே நிலை கொண்டுள்ளது. அதேசமயம், தெற்கு ஆந்திரா மற்றும் தெற்கு கர்நாடகாவில் நிலவி வந்த மற்ற இரண்டு காற்றழுத்த சுழற்சிகள் மறைந்து விட்டன.

இதனால் வட தமிழகத்தில் நேற்று பெய்த மழை இன்று குறைந்துள்ளது. இந்த இரு சுழற்சிகள் தான் வட தமிழகம் வரை காற்றை ஈர்த்து வழங்கி வந்தது. தற்போது அதற்கு வாய்ப்பில்லை என்பதால் சென்னை உட்பட வட தமிழகத்துக்கு மழை குறைந்துள்ளது.

அதேசமயம், தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். இந்த மழை 6-ம் தேதி வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் தற்போது அது 8-ம் தேதி வரை நீடிக்கும் என தெரிகிறது எனவும், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் செல்வகுமார் தெரிவித்துள்ளார்..

டிசம்பர் 12-ம் தேதியையொட்டி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. அது சற்று வலிமையாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. அதன்போக்கை பொறுத்து டிசம்பர் 12-ம் தேதிக்கு பிறகு மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதனிடையே சென்னையில் நேற்று மாலைமுதல்பரவலாகமழைபெய்தது. கிண்டி, எழும்பூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, வேளச்சேரி, திருவான்மியூர், திருவொற்றியூர், ராயபுரம்உள்ளிட்டபல்வேறுஇடங்களில்மழைபெய்தது.