Asianet News TamilAsianet News Tamil

பாட்டியை கதற கதற உருட்டுக் கட்டையால் அடித்தே கொன்ற பேரன்; போதையில் வெறிச் செயல்...

grandson beaten and killed his grandmother due to not giivng money for drinking
grandson beated and killed his grandmother due to not giivng money for drinking
Author
First Published May 25, 2018, 8:45 AM IST


திருவள்ளூர்
 
சாராயம் குடிக்க பணம் தராததால் பாட்டியை உருட்டுக் கட்டையால் அடித்தே கொன்ற பேரனை காவலாளர்கள் செய்தனர். 

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த வஞ்சிவாக்கம் கூட்டு சாலையில் மணிமேகலை (70) என்பவர் வசித்து வந்தார். இவருடன் இவரது மகளின் மகனான கமல் என்பவரும் தங்கியிருந்து பொன்னேரியில் உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். 

நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்த கமல் சாராயம் குடிக்க தனது பாட்டி மணிமேகலையிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு பணம் தர மறுத்துள்ளார் மணிமேகலை. 

இதனால் ஆத்திரமடைந்த கமல், பாட்டியிடம் ரதகராறில் ஈடுபட்டார். அப்போதும் மணிமேகலை பணம் தர மறுத்துவிட்டார். இந்த நிலையில் கோபித்துக்கொண்டு வெளியே சென்றுவிட்ட கமல், திரும்பி வரும்போது சாராயம் குடித்துவிட்டு போதையில் தள்ளாடிக் கொண்டுவந்தார். 

அப்போது, கமல் மீண்டும் பாட்டியிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது அருகில் கிடந்த உருட்டுக் கட்டையால் மணிமேகலையை தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

பாட்டியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது கொலை நடந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து திருப்பாலைவனம் காவலாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த காவலாளர்கள், கமலை கைது செய்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios