Asianet News TamilAsianet News Tamil

 இடியுடன் தொடங்கியதா வடகிழக்கு பருவமழை? -  4 பெண்கள் படுகாயம்...!

Four women were admitted to Puducherrys Jipmer Hospital.
Four women were admitted to Puducherry's Jipmer Hospital.
Author
First Published Oct 27, 2017, 4:41 PM IST


மரக்காணம் அடுத்த நடுக்குப்பத்தில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 4 பெண்கள் இடிதாக்கி படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்த 4 பெண்களும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தென்மேற்கு பருவமழை காலத்தில் கேரளா, கடலோர கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய பகுதிகளில் மழை அதிகம் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு தமிழகத்திலும் தென் மேற்கு பருவமழை சீசனில் நல்ல மழை பெய்தது.

இந்த நிலையில் அடுத்த 2 தினங்களுக்குள் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.  

தென்மேற்கு பருவமழை காலம் நேற்றுடன் நிறைவடைந்து,  வடகிழக்கு திசையில் இருந்து காற்று வீச தொடங்கியது. 

சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 தினங்களாக வெப்பசலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. 

தமிழகம், புதுச்சேரியில் இன்று வடகிழக்கு பருவமழை முழுமையாக தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்நிலையில், மரக்காணம் அடுத்த நடுக்குப்பத்தில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 4 பெண்கள் இடிதாக்கி படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்த 4 பெண்களும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios