Asianet News TamilAsianet News Tamil

செங்கல்பட்டு அருகே 3 இடங்களில் சாலை விபத்து - 4 பேர் பலி...!

Four deaths in a road accident in different places near Chengalpattu have caused tragedy among the people.
Four deaths in a road accident in different places near Chengalpattu have caused tragedy among the people.
Author
First Published Oct 23, 2017, 9:21 AM IST


செங்கல்பட்டு அருகே வெவ்வேறு 3 இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையின் முன்பு தாமஸ் என்பவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது, வேகமாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் தாம்ஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதேபோல் செங்கல்பட்டு அருகே புளிப்பாக்கத்தில் ஆறுமுகம் என்பவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

அதேபோல் புளிப்பாக்கத்தில் சாலை தடுப்பு சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் கோதண்டம் என்பவர் உயிரிழந்தார். 

மேலும் செங்கல்பட்டு அருகே ஆலப்பாக்கத்தில் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி சின்னம்மா என்பவர் இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்துகள் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios