மணல் கடத்திய ஐவர் கைது; லாரிகள் பறிமுதல்; நடவடிக்கை தொடரும் என்று போலீஸ் கடும் எச்சரிக்கை...
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் மணல் கடத்திய ஐந்து ஓட்டுநர்களை காவலாளர்கள் சோதனையின்போது கைது செய்தனர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனையடுத்து அந்த சோதனையில் மணல் கடத்திவந்த மூன்று டிப்பர் லாரிகள், 1 லாரி என மொத்தம் நான்கு லாரிகளை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர். பின்னர், ஓட்டுநர்களான மதன்குமார், சத்யராஜ், அஜித்குமார், பிரகாஷ் ஆகிய நால்வரையும் காவலாளர்கள் கைது செய்தனர்.
ஒரேநாள் சோதனையில் மணல் கடத்திவந்த ஐந்து லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டதும், அதன் ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டதும் குறித்து காவலாளர்கள், இனி தொடர் சோதனையில் ஈடுபட போவதாக திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.