Asianet News TamilAsianet News Tamil

மீன் பிடி துறைமுகத்தில் திடீர் தீ .. ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

fire in fishing boats
fire in-fishing-boats
Author
First Published May 11, 2017, 3:18 PM IST


சென்னை காசிமேடு துறைமுகத்தில் மீன்பிடி படகுகளுக்கு வைக்கப்பட்ட தீயில், 6 படகுகள் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.

fire in-fishing-boats

சென்னை காசிமேடு துறைமுகத்தில் 6 மீன் பிடி படகுகளுக்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்ததில் துறைமுகமே புகைபடலமாக காட்சி அளித்தது.

இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து 3 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அனைத்து வருகின்றனர்.  

fire in-fishing-boats

காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீ மடமடவென பரவி 6 படகுகளும் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்களும்  தீயில் எரிந்து நாசமாயின.

fire in-fishing-boats

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மீன்பிடி படகுகளுக்கு தீ வைத்தது யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios