தனியார் கம்பெனிக்கு வேலைக்குபோன பெண் மாயம்; கண்டுபிடித்து தருமாறு உறவினர்கள், ஊர்க்காரர்கள் போராட்டம்...
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் உள்ள தனியார் கம்பெனிக்கு வேலைக்கு சென்ற 27 வயதுடைய பெண் இரண்டு நாள்களாக காணவில்லை. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் ஊர்க்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனையேற்ற காணாமல் போன பெண்ணின் பெற்றோர் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகார் மனுவை பெற்றுக் கொண்ட காவலாளர்கள் இதுகுறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.