Asianet News TamilAsianet News Tamil

பெத்த மகளை தொடர்ந்து கற்பழித்து வந்த  தந்தை !! குழந்தை பிறந்ததால் அதிர்ச்சி !!

Father continiously raped his daughter in vellore
Father continiously raped his daughter in vellore
Author
First Published Jun 26, 2018, 10:55 PM IST


வேலூர் அருகே தான் பெற்ற 14 வயது மகளை தந்தையே தொடர்ந்து பல முறை கற்பழித்துள்ளார். இதையடுத்து அந்த சிறுமிக்கு நேற்று பெண் குழந்தை ஒன்று இறந்தே பிறந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஆற்காட்டை அடுத்த காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் கருப்பையா தனது மூத்த மகளான 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

Father continiously raped his daughter in vellore

தொடர்ந்து அவர் மகளிடம் இதே போல் நடந்து கொண்டதால் அந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இது குறித்து அந்த சிறுமி தாயிடம் தெரிவிக்கவே அதிர்ந்து போன அவர் கருப்பையாவிடம் தகராறு செய்துள்ளார்.

அப்போது இந்த விஷயத்தை யாரிடமாவது சொன்னால் தாய், மகள் இருவரையும் கொலை செய்துவிடுவேன் என  கருப்பையா மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் அந்த சிறுமிக்கு நேற்று பெண் குழந்தை ஒன்று இறந்தே பிறந்தது. அந்த சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Father continiously raped his daughter in vellore

இதனிடையே இறந்து பிறந்த அந்த  பெண் குழந்தையின் உடலை கருப்பையா தூக்கிச் சென்றார் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் தற்போது தலைமறைவாகியுள்ளார்.

பெற்ற மகளிடமே தந்தை  தவறாக நடந்து  கொண்ட இந்த சம்பவம் ஆற்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ராணிப் பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அன்பு செல்வி ,  கருப்பையா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios