தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை கேட்டு போராடிய விவசாயிகள் கைது... இன்னும் எத்தனை நாள் போராட்டமோ?
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில் 338 பேருக்கு போன வருட பயிர்க் காப்பீட்டுத் தொகையை இன்னமும் தரவில்லை. இதனைக் கண்டித்து காத்திருப்பு போராட்டம் நடத்திய 48 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
மாவட்டச் செயலாளர் துரைராஜ், வட்டச் செயலாளர் இராசையன் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையான, "பயிர்க் காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும்" என்றும் பயிர்க் காப்பீட்டுத் தொகையை தராமல் அலட்சியம் காட்டும் அதிகாரிகளை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
பந்தல் அமைத்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட முற்பட்ட விவசாயிகள் 48 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.