Asianet News TamilAsianet News Tamil

“ஊருக்குள் தஞ்சம் புகுந்த 6 யானைகள்” – விரட்டும் பணியில் வனத்துறையினர் : கிருஷ்ணகிரியில் பரபரப்பு..!!

elephants in-krishnagiri
Author
First Published Nov 27, 2016, 12:02 PM IST


கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே குருபராத்தப்பள்ளி என்ற கிராமம் உள்ளது.

இந்த கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியிலிருந்து அடிக்கடி வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

இந்நிலையில், போடூர் பள்ளம் வனப்பகுதியில் இருந்து வந்த 6 யானைகள் குருபராத்தப்பள்ளியில் நுழைந்தது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

இந்த யானைகளை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செட்டிபள்ளி வனப்பகுத்திக்கு விரட்டும் பணியை வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் மேற்கொண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Follow Us:
Download App:
  • android
  • ios