முதியோருக்கு இலவச பஸ் பாஸ்..இந்தெந்த தேதிகளில் பெற்றுக்கொள்ளலாம்.. அறிவிப்பு வெளியானது..
சென்னை வாழ் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் ஜூன் 21 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் உள்ள 40 பணிமனைகளில் இந்த மாதம் 30 ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வாழ் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் ஜூன் 21 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் உள்ள 40 பணிமனைகளில் இந்த மாதம் 30 ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டிற்கு முதியோருக்கு வழங்கப்படும் இலவச பஸ் பாஸ் டோக்கன் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி, வரும் ஜூன் 21 ஆம் தேதி முதல் முதியோருகளுக்கான இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகின்றன.
ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான மூன்று மாதங்களுக்கு மொத்தமாக ஜூன் 30 ஆம் தேதி வரை தினமும் சென்னை மாநகர 40 பணிமனைகளில் பேருந்து டோக்கன் மற்றும் பயன அட்டை வழங்கப்படுகிறது. இந்த தேதிகளில் சென்று முதியோர் தங்களுக்கு இலவச பேருந்து பாஸ்களை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஒரு வருஷத்துக்கு மலைப் பகுதிகளில் பணி... ஆசிரியர்களுக்கு ஷாக் கொடுத்த பள்ளிக்கல்வித்துறை!!