dmk protest against privatisation of ennore port
சென்னையை அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதற்கு ஆதரவு தரும் தமிழக அரசைக் கண்டித்தும் எண்ணூர் துறைமுகம் முன்பு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Add Asianetnews Tamil as a Preferred Source

திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் காமராஜர் துறைமுகம் கடந்த 2001ம் ஆண்டு கருணாநிதியின் தலைமையில், 3000 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி ரூ.15,000 கோடி மதிப்புள்ள, அன்றைய பிரதமரால் திறக்கப்பட்டு, இன்று வரை லாபத்தோடு இயங்கி வருகிறது.

அதன்படி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் துறைமுக நுழைவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
