அண்ணா பல்கலைக்கழகத்தில் மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண் வழங்க லஞ்சம் பெற்றது தொடர்பாக 10 பேராசிரியர்கள்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அண்ணாபல்கலைக்கழகத்தில்மறுமதிப்பீட்டில்கூடுதல்மதிப்பெண்வழங்கலஞ்சம்பெற்றதுதொடர்பாக 10 பேராசிரியர்கள்மீதுவழக்குப்பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சென்னைஅண்ணாபல்கலைக்கழகத்தால்அங்கீகரிக்கப்பட்டகல்லூரிகளில்படிக்கும்மாணவர்கள்தங்களதுவிடைத்தாள்களைமறுமதிப்பீடுசெய்யவிரும்பினால்ரூ.700 செலுத்திவிண்ணப்பிக்கவேண்டும்அந்த 700 ரூபாயில்ரூ.300விடைத்தாள்போட்டோகாப்பிக்கும்ரூ.400 மறுமதிப்பீட்டுக்கானகட்டணமாகஎடுத்துக்கொள்ளப்படும்.

ரூ.700 பணம்கட்டிவிண்ணப்பித்ததும்அந்தபாடத்துக்குரியநிபுணர்அந்தவிண்ணப்பத்தைஆய்வுசெய்வார்மதிப்பெண்மறுமதிப்பீட்டுக்குஅந்தவிடைத்தாள்உகந்ததாஎன்றுஆய்வுசெய்துபரிந்துரைசெய்வார்இதையடுத்துஅங்கீகரிக்கப்பட்டகல்லூரிகள்மூலம்மறுமதிப்பீடுநடக்கும்மையம்தேர்வுசெய்யப்படும்அந்தவகையில் 23 மையங்களில்மறுமதிப்பீடுபணிநடக்கும்.

அண்ணாபல்கலைக்கழகதேர்வுகட்டுப்பாட்டுஅதிகாரிநேரடியாகஇதற்கானஅதிகாரிகள்மற்றும்மறுமதிப்பீடுசெய்பவர்களைமுடிவுசெய்துநியமிப்பார்மறுமதிப்பீட்டின்போதுஏற்கனவேஎடுத்தமதிப்பெண்களைவிடகுறைவானமதிப்பெண்வந்தால்எந்தமாற்றமும்செய்யமாட்டார்கள்.

மறுமதிப்பீடுசெய்தபிறகுஏற்கனவேஎடுத்தமதிப்பெண்ணைவிட 15 சதவீதத்துக்கும்கூடுதலாகமதிப்பெண்பெற்றால்,மேலும்ஒருநபரிடம்மறுமதிப்பீடு செய்ய உத்தரவிடப்படும். அவர்கள் இருவரில் யார் அதிக மதிப்பெண் அளித்துள்ளாரோ அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் இடைத்தரகர்கள், பேராசிரியர்களுடன் தங்களுக்கு இருக்கும் தொடர்பு மூலம், அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற ஆசையுடன் வரும் மாணவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு முறைகேடு செய்துள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் பொறியியல் தேர்வுகள் எழுதிய மாணவர்கள், விடைத்தாள் மறுமதிப்பீட்டு கோரி விண்ணப்பித்திருந்தனர். மறுமதிப்பீடு செய்து வெளிவந்த தேர்வு முடிவுகளில், பல மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்தது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, மாணவர்களிடம் பணம் வாங்கி கொண்டு விடைத்தாள் மறுமதிப்பீட்டில் முறைகேடு நடைப்பெற்றுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அண்ணா பல்கலை முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் உமா, திண்டிவனம் மண்டல அதிகாரிகள் விஜயகுமார், சிவகுமார், மற்றும் 7 பேராசிரியர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும், லஞ்சம் கொடுத்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.