நாகை அருகே போக்குவரத்து கழக கட்டட விபத்து !! பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு !!!
பொறையார் அரசு போக்குவரத்துக்கழக கட்டட மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
நாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த பொறையாரில் அரசு போக்குவரத்துக்கழக பணிமணையில் உள்ள உழியர்களுக்கான ஓய்வறையின் மேற்கூரை இன்று அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்ததில் அங்கு தூங்கிக் கொண்ந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அவர்களில் 7 பேர் ஓட்டுநர்கள். ஒருவர் நடத்துனர். படுகாயம் அடைந்த 3 பேர் காரைக்கால் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் காரைக்கால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெங்கடேசன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் பொறையார் போக்குவரத்து கழக பணிமனையின் ஊழியர்கள் ஓய்வறை முற்றிலும் இடிக்கப்படுகிறது. இதற்காக 2 பொக்லைன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.