Asianet News TamilAsianet News Tamil

நாகை அருகே  போக்குவரத்து கழக கட்டட விபத்து  !!   பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு !!!

Death roll incresed to 9 in porayar accident
Death roll incresed to 9 in porayar accident
Author
First Published Oct 20, 2017, 11:09 AM IST


பொறையார் அரசு போக்குவரத்துக்கழக கட்டட மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

நாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த பொறையாரில் அரசு போக்குவரத்துக்கழக பணிமணையில் உள்ள உழியர்களுக்கான ஓய்வறையின் மேற்கூரை  இன்று அதிகாலை  3 மணியளவில் இடிந்து விழுந்ததில் அங்கு தூங்கிக் கொண்ந்த  8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Death roll incresed to 9 in porayar accident

அவர்களில்  7 பேர் ஓட்டுநர்கள். ஒருவர் நடத்துனர். படுகாயம் அடைந்த 3 பேர் காரைக்கால் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில்  காரைக்கால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெங்கடேசன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் பொறையார் போக்குவரத்து கழக பணிமனையின் ஊழியர்கள் ஓய்வறை முற்றிலும் இடிக்கப்படுகிறது. இதற்காக 2 பொக்லைன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

 

Follow Us:
Download App:
  • android
  • ios