திண்டுக்கல் அருகே உயிருடன் உள்ள நபருக்கு இறப்பு சான்றிதழ் கொடுக்கப்பட்டதை மாற்றி தர கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கழுத்தில் மாலையுடன் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது கொசவம்பட்டியை சேர்ந்த அதிசயநாதன் என்பவர் கழுத்தில் மாலை அணிந்தபடி , நான் இறந்து விட்டேனா ? இல்லையா ? என்ற வாசகங்கள் அடங்கிய அட்டையினை ஏந்தி வந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

பின்னர் , நடந்த விசாரணையில் அதிசய நாதன் என்ற நபர் கடந்த 2007ஆம் ஆண்டு இறந்துவிட்டதாக கிராம நிர்வாக அலுவலகம் சான்று வழங்கியுள்ளது. அதை மாற்றித் தரக்கோரி பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் தரப்பில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து , உயிரோடு உள்ள நபருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.