“சைபர் கிரைம்” - எந்த வழக்குக்கு எந்த தண்டனை தெரியுமா?
பெருகி வரும் குற்றச்செயல்கள் பெரும்பாலானவை சைபர் கிரைம் குற்றமாகவே தெரிய வந்துள்ளது.
ஆன்லைன் சீட்டிங் தொடங்கி, பெண்களுக்கு கொடுக்கப்படும் பல தொந்தரவுகள் சைபர் கிரைமில் வருகிறது.
இதில் எந்தெந்த குற்றத்திற்கு, எந்த வழக்கு போடப்படுகிறது ? எந்த வழக்கின் கீழ் குற்றச்செயல்கள் பதிய படுகிறதோ, அவர்களுக்கு எந்த மாதிரியான தண்டனை வழங்கப்படும் என்பதை பார்க்கலாம்.
சைபர் கிரைம் போலீஸ் வழக்கு பதிவு செய்தால் என்ன தண்டனை கிடைக்கும்?
ஜ.டி. சட்டம் 2008ன் படி - மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை சிறைவாசம் அதே போல் மேலும், ஒரு லட்சம் முதல் ஜந்து லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம்.
கீழ்கண்ட செக்ஷன்களில் கைதானால் – பெரும்பாலும் பெயில் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது
பிரிவு - குற்றம்
66 - ஹேக்கிங்
66A - ஆபசமாக மெஸேஜ் அனுப்புவது
66B - கம்ப்யூட்டர், இன்டர்நெட் வழியாக திருடப்படுவது
66C - அடுத்தவர்களின் டிஜிட்டன் சைன், பாஸ்வேர்டுகளை திருடுவது
66D - போலி ஜடி உருவாக்கி, தன்னை வேறு ஒருவர் போல் காட்டி
மிரட்டுவது, மோசடி செய்வது.
66E - ஆண், பெண் இருவரின் உடல் பாகங்களை சட்டவிரோதமான
முறையில் வெளியிடுவது
66F - சைபர் டெர்ரஸிஸம், இந்திய இறையாண்மைக்கு எதிரான்
செயல்களில் ஈடுபடுவது
67 - ஆபாச போட்டோ வெளியிடுவது
67A - ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடுதல்
67B - குழைந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வெளியிடுவது
இது தவிர்த்து , மான நஷ்ட ஈடு வழக்கும், அனுப்பும் மெஸேஜில் மிரட்டல் இருந்தால், கொலைமிரட்டல் வழக்கும் தனியாக தொடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது