Asianet News TamilAsianet News Tamil

திருநங்கைகளுடன் குரூப் செக்ஸில் சிக்கிய போலீஸ்... சீச்சீய்ய்ய்ய்... சென்னை போலீஸ்!

தமிழக போலீஸுக்கென்று ஒரு கெத்து உண்டு. மாநில தலைநகர் என்ற நிலையில் சென்னை போலீஸின் கம்பீரமும், செயல்பாடுகளும் அப்ளாஸ் வாங்கியவைதான். ஆனால் சமீபத்தில் சென்னை போலீஸ்காரர்கள் இருவர் நடத்திய சீச்சீய்ய்ய் சம்பவங்களால் தலைநகர் போலீஸே தலை குனிந்து நிற்கிறது. 

cop caught red-handed while flashing at schoolgirl
Author
Chennai, First Published Dec 3, 2018, 3:36 PM IST

சிங்கம்லே! என்று பெயரெடுத்து வைத்திருந்த சென்னை போலீஸ் (அ)சிங்கமாவது ஏன்?... சர்வதேச அளவில் இந்திய போலீஸுக்கு தனி மரியாதை உண்டு. அதிலும் தமிழக போலீஸுக்கென்று ஒரு கெத்து உண்டு. மாநில தலைநகர் என்ற நிலையில் சென்னை போலீஸின் கம்பீரமும், செயல்பாடுகளும் அப்ளாஸ் வாங்கியவைதான். ஆனால் சமீபத்தில் சென்னை போலீஸ்காரர்கள் இருவர் நடத்திய சீச்சீய்ய்ய் சம்பவங்களால் தலைநகர் போலீஸே தலை குனிந்து நிற்கிறது. 

சீன் 1: 

சென்னை வில்லிவாக்கம் ஜெகநாதன் தெருவை சேர்ந்த வாசு, சிட்டி போலீஸின் மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ.யாக இருக்கிறார். கடந்த சனிக்கிழமையன்று டூட்டி முடிந்து சரக்கடித்துவிட்டு வீட்டுக்கு வந்திருக்கிறார். அதே தெருவில் பத்து வயது பெண் குழந்தை தனியே விளையாடிக் கொண்டு இருந்திருக்கிறது. போதை அதிகாரிக்கு அசிங்க எண்ணங்கள் ஊற்றெடுக்க, அந்த குழந்தையிடம் விளையாடுவது போல் நடித்து, ஒதுக்குபுறமான இடத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கிறார். cop caught red-handed while flashing at schoolgirl

ஒரு கட்டத்தில் வேதனையில் குழந்தை அழுது சப்தமிட, அப்பவும் வாயை பொத்திவைத்து அத்துமீறியிருக்கிறார். இந்நிலையில் அக்கம் பக்கத்தினர் சிலர் இந்த அசிங்கத்தை பார்த்துவிட ஒன்று கூடி அவரை பிய்த்துப் பிரித்து மேய்ந்துவிட்டனர். வில்லிவாக்கம் போலீஸுக்கு தகவல் போக, அவர்கள் வந்து காயம்பட்டிருந்த காமாந்தக போலீஸ்காரரை மீட்டனர். ஆனாலும் ‘புகார் வேண்டாம்’ என்று குழந்தையின் பெற்றோரை தடுத்துவிட்டதாக தகவல். துறை ரீதியான நடவடிக்கையாவது எடுப்பீர்களா துரைமார்களே?

சீன் 2:

போலீஸ் அதிகாரி வாசு வசமாய் மாத்து வாங்கிய அதேநாள் இரவில் துரைப்பாக்கம் ஸ்டேஷனை சேர்ந்த போலீஸ்காரர் சதீஷ் சத்யராஜூம் வாங்கிக் கட்டியிருக்கிறார் பப்ளிக்கிடம். துரைப்பாக்கம் - பல்லாவரம் ரேடியல் சாலையில் இரவில் புதர்களின்அருகே திருநங்கைகள் ‘வெயிட்டிங்’கில் இருந்திருக்கின்றனர். 

டூட்டி முடிந்து அந்த வழியே வந்த போலீஸ்காரர் சத்யராஜ் அவர்களை அழைத்து பேச்சு கொடுத்திருக்கிறார். பயந்தபடியே வந்த திருநங்கைகளுக்கு, அப்புறம்தான் தெரிந்திருக்கிறது சாரே ‘அதுக்கு’தான் கூப்பிடுறார்ன்னு. பிறகென்ன, ரெண்டு திருநங்கைகளை (அதுவும் ரெண்டு...என்னா ஃபீலிங்கி?) அழைத்துக் கொண்டு ஒதுங்கியிருக்கிறார் சத்யராஜ். இந்த கூத்துக்களை அந்த வழியே வந்த சில பப்ளிக் பார்த்துவிட்டு, அக்கம் பக்கம் ஏரியாவாசிகளை அழைத்துள்ளனர். cop caught red-handed while flashing at schoolgirl
 
எல்லோரும் கூடி ஒரு இடத்தில் டார்ச் அடித்தபோது திருநங்கைகளுடன் குரூப் செக்ஸில் இருந்திருக்கிறார் போலீஸ்காரர். மக்களை கண்டதும் தெறித்து ஓடியவர் ஒரு கட்டத்தில் சேற்றில் விழுந்து சிக்கிக் கொண்டார். சிக்கியவரை தூக்கி பள்ளிக்கரணை போலீஸில் ஸ்டேஷனில் ஒப்படைத்திருக்கின்றனர். இவருக்கு தகுந்த தண்டனை கொடுங்க டியர் ஆபீஸர்ஸ். ஒரே நாள் இரவில் நடந்த இந்த இரண்டு ஒவ்வாத காம சேட்டைகளாலும், அதுவும் பப்ளிக் கையில் சிக்கி அசிங்கப்பட்டிருப்பதாலும் தலைநகர் போலீஸ்  தலை குனிந்திருக்கிறது. பணிப்பளு, மன உளைச்சல், அதான் பாதை மாறிவிட்டனர்! என்று ஏதாச்சும் காரணம் சொல்லி எஸ்கேப் பண்ணி விட்டீங்கன்னா, பிய்ச்சுப் போடுவோம் பிய்ச்சு!ன்னு பப்ளிக் விடுற சத்தம் கேட்குதா?...

Follow Us:
Download App:
  • android
  • ios