கல்லூரி மாணவர்களின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு; அடிப்படை வசதிகள் கேட்டு வகுப்புகள் புறக்கணிப்பு...
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் உள்ள மன்னர் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தின் மூலம் கல்லூரியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு வலியுறுத்தினர்.