chhota rajan is convicted in fake passport case
தாவூத் கூட்டாளி சோட்டா ராஜன் உள்ளிட்ட 3 பேர் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
3 பேருக்கான தண்டனை குறித்து நாளை அறிவிக்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நடைபெற பல கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளவர் சோட்டா ராஜன். மோகன்லால் என்ற பெயரில் போலி பாஸ்போர்ட் உதவியுடன் கடந்த ஆண்டு நாட்டை விட்டு தப்பி ஓடிய ஓவர் இந்தோனிசியாவில் போலீசாரால் கைது செய்யபட்டார். மேலும் அவருக்கு அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு குறித்து குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு குறித்த விசாரணை முடிவுற்ற நிலையில், இன்று டில்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் சோட்டா ராஜன் உள்ளிட்ட3 பேர் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
மேலும், 3 பேருக்கான தண்டனை குறித்து நாளை அறிவிக்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளத
