Asianet News TamilAsianet News Tamil

கருணாநிதி நினைவு தின பேரணியில் கலந்து கொண்ட சென்னை கவுன்சிலர் திடீர் உயிரிழப்பு..! அதிர்ச்சியில் திமுக

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு தின பேரணியில் கலந்து கொண்ட சென்னை மாநகராட்சி கவுன்சிலர் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலுக்கு  திமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 

Chennai Corporation Councilor who participated in Karunanidhi Memorial Day rally dies
Author
First Published Aug 7, 2023, 10:46 AM IST

கருணாநிதி நினைவு தின பேரணி

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னை ஓமத்தூரார் மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி நினைவு சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து அவரது தலைமையில் திமுகவினர் கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதி பேரணி சென்றனர். இந்த பேரணியில் அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டர். 

Chennai Corporation Councilor who participated in Karunanidhi Memorial Day rally dies

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் மரணம்

இந்த பேரணியில் கலந்து கொண்ட  சென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவின் கழகத் தலைமை செயற்குழு உறுப்பினரும், 146வது வார்டு மாமன்ற உறுப்பினருமான ஆலப்பாக்கம் சண்முகத்திற்கு திடீரென உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவசர அவசராமக மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதும் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் திமுகவினர் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து  மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறைந்த மாநாகராட்சி உறுப்பினர் சண்முகம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். 

இதையும் படியுங்கள்

Breaking News : செந்தில் பாலாஜிக்கு 5 நாட்கள் அமலாக்கத்துறை காவல்- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Follow Us:
Download App:
  • android
  • ios