சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தேசியக் கொடி ஏற்றிய போது ரயில்வே அதிகாரி ஒருவர் செல்போனில் பேசும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
70ஆவது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் குடியரசுத் தலைவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் பன்வாரிலால் கொடி எற்றி வைத்தார். அதேபோல, மாநிலம் முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகளிலும் குடியரசு தினம் கொண்டாடப்படும் நிலையில்,சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலும் ஒவ்வொரு ஆண்டும் தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டும் ரயில் நிலைய வாசலில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அப்போது தேசிய கீதம் போட்ட போது ரயில்வே அதிகாரி இப்ராகிம் செல்போனில் பேசியுள்ளார். அவரது பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்து பேசும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 26, 2019, 2:00 PM IST