Asianet News TamilAsianet News Tamil

கொடி ஏற்றிய போது செல்போனில் பேசிய அரசு அதிகாரி! வைரலாகும் வீடியோ!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தேசியக் கொடி ஏற்றிய போது ரயில்வே அதிகாரி ஒருவர் செல்போனில் பேசும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக  வைரலாகி வருகிறது.

chennai central railway station flag video
Author
Chennai, First Published Jan 26, 2019, 1:49 PM IST

70ஆவது குடியரசு தின விழா இன்று  நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் குடியரசுத் தலைவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.  

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் பன்வாரிலால்  கொடி எற்றி வைத்தார். அதேபோல,  மாநிலம் முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகளிலும் குடியரசு தினம்  கொண்டாடப்படும் நிலையில்,சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலும்  ஒவ்வொரு ஆண்டும் தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம். 

அந்த வகையில் இந்த ஆண்டும் ரயில் நிலைய  வாசலில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. அப்போது தேசிய கீதம் போட்ட போது ரயில்வே அதிகாரி இப்ராகிம் செல்போனில் பேசியுள்ளார். அவரது பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்து பேசும்  வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

Follow Us:
Download App:
  • android
  • ios