Asianet News TamilAsianet News Tamil

30 ஆண்டகள் காங்கிரஸ் கட்சியால் செய்ய முடியாததை பாஜக 10 ஆண்டுகளில் செய்து காட்டியது - ராஜநாத்சிங் பெருமிதம்

நாமக்கல் மாவட்டத்தில் பாஜக வேட்பாளரை ஆதரித்து வாகன பேரணி மேற்கொண்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் கட்சியால் 30 ஆண்டுகள் செய்ய முடியாததை நாங்கள் 10 ஆண்டுகளில் செய்துள்ளதாக தெரிவித்தார்.

central minister rajnath singh did roadshow at namakkal for supporting dmk candidate vel
Author
First Published Apr 8, 2024, 3:36 PM IST

நாமக்கல் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வாகன பேரணியில் பங்கேற்றார். இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் உரையாற்றிய அவர், உலக நாடுகள் மத்தியில் மோடியால் நமக்கு பெருமை கிடைத்துள்ளது. காங்கிரஸ் 30 ஆண்டுகள் செய்ய முடியாததை 10 ஆண்டுகளில் மோடி அரசு செய்துள்ளது.

2014ம் ஆண்டுக்கு முன்பு நாட்டின் பொருளாதாரம் 11வது இடத்தில் இருந்தது. இப்பொழுது 2024ல் 3வது இடத்தில் இருக்கிறோம். தற்போது 400 சீட் பெருவாரியாக பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம். தமிழகத்தி்ல் காங்கிரஸ், திமுக கூட்டணியாக இருக்கிறது. அதற்கு இந்தியா என்று பெயர் வைத்திருக்கிறார்கள். 

பலமுறை கேப்டனுடன் வந்த நான் முதல் முறையாக தனியாக வந்துள்ளேன்; பண்ருட்டியில் கண் கலங்கிய பிரேமலதா

பாரதிய ஜனதா கூட்டணி சொல்வதைத்தான் செய்யும், செய்வதைத் தான் சொல்லும். அதன்படி ராமர் கோவிலை கட்டி முடித்திருக்கிறோம். தேர்தலுக்கு முன்பாக தற்போது ராமர் ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். மெஜாரிட்டியாக ஜெயிக்கும் போது காஷ்மீர் ஆக்ட் 370 ரத்து செய்வோம் என்று கூறியிருந்தோம். அதன்படியே செய்திருக்கிறோம்.

எந்த மதத்திற்கும் நாங்கள் போக சொல்ல வில்லை. சிட்டிசன் திட்டத்தை அமல்படுத்தி இருக்கிறோம். எந்த மதத்திற்கும் தீமை செய்யக்கூடாது என்ற விதத்தில் எந்த மதத்திற்கு யாரோ போக வேண்டிய அவசியம் தேவையில்லை. முத்தலாக் திட்டம் மக்களுக்கும், தாய்மார்களுக்கும் நன்மையே உண்டாக்கும். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு எந்த ஒரு பிரதமர் தலைமையிலும்  நாடு முன்னேறவில்லை. ஆனால் மோடி தலைமையில் நாடு வளர்ச்சி அடைந்துள்ளது.

உலக நாடுகள் அனைவரும் மோடியை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். எந்வொரு உயர்ந்த தலைவருக்கும் இது போன்ற மதிப்பு கொடுத்ததே இல்லை. எந்த உத்தரவாதம் கொடுத்தாலும் நாங்கள் அதை நிறைவேற்றி இருக்கிறோம். நாம் யாருக்கும் சலித்தவர்கள் இல்லை. பாதுகாப்பு அமைச்சராக நான் கூறுகிறேன். யாருக்கும் கையேந்தி நிற்க வேண்டிய அவசியம் இல்லை. உறுதியாக நமது ராணுவ தளவாடங்கள், ஏவுகணைகள் அனைத்தும் இறக்குமதி செய்து கொண்டுதான் இருந்தோம். தற்போது இறக்குமதி செய்வதில்லை. நாமே தயாரித்து நமக்கு நாட்டுக்கு தேவையான பாதுகாப்பு படி நாமே தயாரித்திருக்கிறோம்.

நாகை ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் தீக்குளிப்பு; உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

ஸ்வச் பாரத் மூலம் ஏழைகளுக்கு கழிவறை மற்றும் தரமான வீடுகளை கட்டிக் கொண்டுள்ளோம். சிறு வியப்பாரிகளுக்கு நல்லது செய்து கொண்டு தான் இருக்கிறோம். 2047ல் நாம் மிகப்பெரிய சக்தியான நாடாக உருவாகும் முயற்சியை செய்து கொண்டிருக்கிறோம். திமுகவும், காங்கிரசும் மக்களுக்கு இதுவரை எதுவும் செய்யவில்லை. தற்போது வரை மோடி அரசு மக்களுக்கு உழைத்துக் கொண்டு இருக்கிறது. சூப்பர் பவராக இந்தியா மாறும் அதற்காக காத்துக் கொண்டிருங்கள். நமது வேட்பாளர் கே பி ராமலிங்கம் வெற்றி பெற செய்வோம். ராமலிங்கம் பாராளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்றி நமக்கு தேவையான பணிகளை செய்து கொடுப்பார் என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios