Asianet News TamilAsianet News Tamil

பாதயாத்திரை சென்ற துறவிகள் மீது கார் மோதல்... சம்பவ இடத்திலேயே 2 பெண்கள் உயிரிழப்பு!

கிருஷ்ணகிரியில் பாதயாத்திரை சென்ற ஜெயின் துறவிகள் மீது கார் மோதியது. இந்த விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Car accident... 2 people kills
Author
Tamil Nadu, First Published Dec 16, 2018, 11:17 AM IST

கிருஷ்ணகிரியில் பாதயாத்திரை சென்ற ஜெயின் துறவிகள் மீது கார் மோதியது. இந்த விபத்தில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஜெயின் துறவிகள் சிலர், நேற்றிரவு கிருஷ்ணகிரி அரசு கல்லூரி அருகே பத்மாவதி கோவிலில் தங்கிவிட்டு, அதிகாலையில் நடைபயணத்தை தொடங்கினர். அப்போது சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் சென்றிக்கொண்டிருந்த துறைவிகள் மீது மோதியது. இந்த விபத்தில் ஜெயின் துறவிகள் குழுவில் இருந்த ஜிந்தர் மற்றும் பூஜா ஆகிய 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். Car accident... 2 people kills

பின்னர் கார் நிலைதடுமாறி இடதுபுறமாக இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் அங்கிருந்து தப்பித்தார். இந்த விபத்து தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த 2 பெண்கள் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தப்பியோடி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios