Asianet News TamilAsianet News Tamil

வாயைக் கொடுத்து வாங்கிக்கட்டிய பயில்வான் ரங்கநாதன்..! போன் போட்டுப் பொளந்த பிரபல பாடகி..!

நடிகர், நடிகைகளின் அந்தரங்களை தவறாக விமர்சித்து கருத்து தெரிவித்து வரும் பயில்வான் ரங்கநாதனை பிரபல பின்னனி பாடகி சுசித்திரா போனில் தொடர்பு கொண்டு திட்டிய ஆடியோ வைரலாகி வருகிறது.

Bayilvan Ranganathan has been contacted on the phone by playback singer Suchitra and the insulting audio
Author
Tamilnadu, First Published Jun 6, 2022, 11:06 AM IST

நடிகையின் அந்தரங்கங்களை விமர்சிக்கும் பயில்வான்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் பயில்வான் ரங்கநாதன். பல படங்களில் வில்லனாகவும் நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். பத்திரிக்கையாளராகவும் உள்ள பயில்வான் ரங்கநாதன், யூட்யூப் சேனலை நடத்தி வருகிறார்.சினிமாவில் நடிப்பதை காட்டிலும் யூட்யூப் சேனல் மூலமாகவே அதிகம் சம்பாதித்து வருகிறார். பயில்வான் ரங்கநாதன். பல்வேறு நடிகைகள் மது போதையில் திரிவதாகவும், பாடி டிமான்ட் என்ற வார்த்தையை பயன்படுத்தி கொச்சையாக பேசி வருகிறார். இவரது பேச்சை கேட்க சமூக வலை தளத்தில் லட்சக்கணக்கான ரசிகர்களும் உள்ளனர், இவர் மீது காவல்துறையில் பல்வேறு புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. நடிகை ராதிகாவோ ஒரு படி மேலை சென்று பெசன்ட் நகர் கடற்கரையில் வைத்து அடித்ததாகவும் தகவல் பரவியது. நடிகர், நடிகைகள் மற்றும் சினிமா பிரமுகர்கள் மீது தக்க ஆதாரங்களுடன் தகவல்களையும், செய்திகளையும் சமூகவலைதளங்களில் பேசி வருவதாகவும்,  எனக்கு யூடியூப் சேனல்களில் மில்லியன் கணக்கான ஃபாலோவர்ஸ் உள்ளனர். யூடியூப் சேனலில் உண்மையை மட்டுமே பேசி வருகிறேன். வேறு தவறான தகவல்களை யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் தெரிவிப்பதில்லை என பயில்வான் கூறியிருந்தார்.

Bayilvan Ranganathan has been contacted on the phone by playback singer Suchitra and the insulting audio

வசமாக சிக்கிய பயில்வான்

இந்தநிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பிரபல பின்னனி பாடகி சுசித்திராவை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாடகி பயில்வான் ரங்கநாதனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கிழித்து தொடங்கவிட்டுள்ளார்,  அந்த ஆடியோவில்....

 சுசித்ரா
உங்களுடைய தற்போதைய வீடியோ பார்த்தேன் அதில் என்னை பைத்தியம், போதைக்கு அடிமை, யார் எந்த செக்ஸ் தொடர்பாக எது கேட்டாலும் பண்ணுவேன் என கூறியுள்ளீர்கள்? இதற்கு ஏதாவது ஆதாரம் உங்களிடம் உள்ளதா?

பயில்வான் ரங்கநாதன்:
எழுதிக் கொடுத்ததை தான் நான் பேசி உள்ளேன், உங்க கருத்தை சொல்லுங்கள் அதையும் பதிவு செய்து விடுகிறேன்

சுசித்ரா:

எனக்கு கருத்து எல்லாம் கிடையாது, என்னை பற்றி மிகவும் அசிங்கமாக பேசி உள்ளீர்கள் ஆபாசமாக பேசி இருக்கீங்க, 

பயில்வான் ரங்கநாதன்:

நீங்கள் போதைக்கு அடிமையாகி இருந்தது தொடர்பாக பத்திரிகையில் செய்தி வந்தது

சுசித்ரா:
இல்லை நீங்கள் லேட்டஸ்டாக ஒரு வீடியோ பதிவு செய்து உள்ளீர்கள், தனுஷ் விவாகரத்து தொடர்பான வீடியோ அது மறுபடியும் குத்தி குளறி உள்ளீர்கள்,முதல் பத்து நிமிடங்கள் என்னை பற்றி தான் பேசியுள்ளீர்கள்..உங்களுக்கு நினைவு இல்லைனா அந்த வீடியோவை நான் உங்களுக்கு அனுப்புகிறேன், சுசித்ரா முழுப் பைத்தியம், ஹோட்டல்ல போயிட்டு காட்டு கத்து கத்து கத்துவாங்க, கார்த்திக் குமார் பாவம் அவர்தான் காப்பாற்றினார், இருந்தாலும் சுசித்ரா முழு பைத்தியம் ஆகி விட்டதாக அந்த வீடியோவில் தெரிவித்து உள்ளீர்கள், சுசித்ரா யார் என்ன கேட்டாலும் கொடுப்பார்கள் என ஒரு இக்கு  வைத்து பேசி உள்ளீர்கள்

பயில்வான் ரங்கநாதன்:
கார்த்திக்கின் பேட்டி பத்திரிக்கையில் வந்தது அதை வைத்து தான் நான் பேசினேன், 

சுசித்ரா: 
இல்லை, உங்களுடைய தனிப்பட்ட கருத்து, தனிப்பட்ட கருத்தை தான் வீடியோவில் தெரிவித்து உள்ளீர்கள்,
நீங்கள் ரொம்ப எல்லை மீறி கேவலத்தின் உச்சிக்கே சென்று விட்டீர்கள்

பயில்வான் ரங்கநாதன்:
இப்பொழுது நீங்கள் ரெடி என்றால் மாலைமுரசு தொலைக்காட்சியிலிருந்து குழுவை அனுப்பி உங்களிடம் பேட்டி எடுக்க கூறுகிறேன்

Bayilvan Ranganathan has been contacted on the phone by playback singer Suchitra and the insulting audio

சுசித்ரா: 
நான் எதுக்கு உங்களுக்கு பேட்டி கொடுக்கணும், நான் எதுக்கு கருத்து சொல்ல வேண்டும், என்னைப் பற்றி மிகவும் மோசமாக பேசி உள்ளீர்கள்,

பயில்வான் ரங்கநாதன்:
எல்லாத்துக்கும் ஒரு பிராயச்சித்தம் இருக்கு

சுசித்ரா: 
பிராயச்சித்தம் என்றால் நீங்கள் தொலைக்காட்சியில் பகிரங்கமாக  மன்னிப்பு கேட்டு வீடியோ பதிவு செய்யுங்கள், உங்களிடம் ஆதாரமும் இல்லை,  கன்னாபின்னாவென தவறாக விமர்சித்து உள்ளீர்கள், 

பயில்வான் ரங்கநாதன்:
எனக்கும் குழந்தை குட்டிகள் எல்லாம் உள்ளது

சுசித்ரா: உங்கள் குழந்தை குட்டிகளை பற்றி யாராவது தவறாகப் பேசினால் ஏற்றுக்கொள்வீர்களா?
ஒன்றுமே தெரியாதவர் போல் பேச வேண்டாம். ரொம்பவே வெகுளி மாதிரி நடிக்க வேண்டாம்

சுசித்ரா: இதற்கு முன்பாக நிறைய முறை பல நடிகைகளை தவறாக பேசீயுள்ளீர்கள்,  கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தால்,  உங்கள் மீது குற்றம் உறுதியாக நிரூபணமாகி விடும்

பயில்வான் ரங்கநாதன்: நான் பேசுவதால் தொலைக்காட்சிதான் 80 சதவீத பயனடைகிறார்கள்

சுசித்ரா:  எவ்வளவு சம்பாதிகிறீங்க? நீங்க எவ்வளவு வாங்கிகுறீங்க ? எவ்வளவு கொடுக்குறாங்க ? என்ற விவரம் எனக்குத் தேவையில்லை இந்த தகவல் எல்லாம் நீங்கள் போலீஸ் சொல்லிடுங்க

பயில்வான் ரங்கநாதன்: உங்க கருத்தை என்னவென்று சொல்லுங்கள்

சுசித்ரா:
 எனது கருத்து உங்களை கைது செய்ய வேண்டும் அது மட்டுமே, நடிகைகளை பற்றி  தொடர்ந்து அவதூராக பேசும் நீங்கள் கண்டிப்பாக கைது செய்ய வேண்டும் அதுதான் என் நிலைப்பாடு, நீங்கள் எங்கே பணம் பெறுகிறீர்களோ, அவர்களுக்கு குரலாக ஒலிக்கின்றீர்கள். சுசித்ரா உங்களுக்கு என்ன பாவம் செஞ்சது ஒரு பொண்ண இவ்வளவு கேவலமா அசிங்கமா பேசுறீங்களே, நாக்கில் நரம்பு இல்லாமல் வாய் கூசாமல் பேசுகிறீர்களே. நீதிமன்றத்தில் கூறுங்கள் உங்கள் கருத்தை எனக்கூறி சுசித்ரா தோலைபேசியை துண்டித்து விடுகிறார். இந்த ஆடியோ சமூக வலை தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்

Reshma: இடுப்பில் குத்திய டாட்டூ...என்ன அர்த்தம்...நெட்டிசனின் ஏடாகூடமான கேள்விக்கு நச்சுனு பதில் தந்த ரேஷ்மா

 

Follow Us:
Download App:
  • android
  • ios