allot fruit ripening calsiyam karbaid

உஷார்....பழங்களை பழுக்க வைக்க கால்ஷியம் கார்பைடு சோதனையில் சிக்கிய டன் பழங்கள் 

சென்னை கோயம்பேடு காய்கனி அங்காடியில் உள்ள பழங்களை கால்ஷியம் கார்பைடு மூலம் பழுக்கச் செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சுமார் 20 பேர் 3 குழுக்களாகப் பிரிந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர் . அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 5 டன் பழங்களை பறிமுதல் செய்து, அதனை அழித்தனர்.

அதாவது சோதனையின் போது , 2 டன் மாம்பழங்கள், 2 டன் சப்போட்டா, 1 டன் பப்பாளி உள்ளிட்ட 5 டன் பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் கோயம்பேடு அங்காடி வளாகத்தின் பின்புறம் கொண்டுசென்று அந்தப் பழங்களை அழித்தனர்.

இந்த செயலில் ஈடுபட்ட நபர்களுக்கு உரித்தான உரிமம் ரத்து, வழக்குப் பதிவு உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.